அண்ணாமலை என்ற வேதாளம் எங்களை விட்டுவிட்டு செல்வப்பெருந்தகை மீது ஏறியுள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் அண்ணாமலை என்ற வேதாளம் எங்களை விட்டுவிட்டு செல்வப்பெருந்தகை மீது ஏறியுள்ளது; ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோர் அதிமுக ரத்தத்தை குடித்த அட்டைகள், அவர்களை அதிமுகவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என கூறுவது திட்டமிட்டு பரப்பப்படும் வதந்திகள்.
அதிமுக தொண்டர்களின் ரத்தத்தைக் குடித்த அட்டைகளை மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பில்லை. அதிமுகவை 90% இணைத்து விட்டதாக சசிகலா கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது. இந்த மூவரை தவிர அதிமுகவிலிருந்து வேறு யாரும் விலகிச் செல்லவில்லை என இவ்வாறு கூறினார்.