spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபாமக போராட்டத்தால் என்எல்சி நிலம் கையகப்படுத்தும் பணி நிறுத்தம்

பாமக போராட்டத்தால் என்எல்சி நிலம் கையகப்படுத்தும் பணி நிறுத்தம்

-

- Advertisement -

பாமக போராட்டத்தால் என்எல்சி நிலம் கையகப்படுத்தும் பணி நிறுத்தம்

கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிலம் கையகப்படுத்தும் பணிகள் இன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Farmers

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் என்.எல்.சிக்கு நிலம் எடுப்பதற்காக பல நூறு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த குறுவைப் பயிர்களை இராட்சத எந்திரங்களைக் கொண்டு கடலூர் மாவட்ட நிர்வாகமும், என்.எல்.சி நிறுவனமும் அழித்தன. சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என என்.எல்.சி. நிர்வாகம் அறிவித்துள்ளது.

we-r-hiring

மேல் வளையமாதேவி கிராமத்தில் கால்வாய் அமைக்கும் பணி கடந்த 2 நாட்களாக போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற நிலையில், என்எல்சி நிலம் கையகப்படுத்தும் பணிகள் இன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இன்று போலீஸ் பாதுகாப்பு கொடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால் கால்வாய் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இன்று பாமக தலைவர் அன்புமணி தலைமையில் நெய்வேலியில் முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது. பாமக போராட்டம் காரணமாக நெய்வேலியில் 1000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பாமக போராட்டத்துக்கு போலீசார் செல்வதால், கால்வாய் அமைக்கும் பணிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கும் வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

 

MUST READ