100% வாக்களிக்க வலியுறுத்தி வணிக நிறுவனங்களுக்கு விடுமுறை
ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக வண்ணாரப்பேட்டையில் வணிக நிறுவனங்கள் ஹோட்டல்கள் வியாபார கடைகள் அனைத்தும் விடுமுறை விடப்பட்டதால் வெறிச்சோடிய வண்ணாரப்பேட்டை
18-வது மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தொழில் அரசு அலுவலகங்கள் தனியார் நிறுவனங்களுக்குவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
அதன் அடிப்படையில் அனைவரும் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி வண்ணாரப்பேட்டை பகுதியில் வியாபாரி சங்கத்தினர் முழுவதுமாக தங்களது கடைகளுக்கு விடுமுறை அளித்துள்ளதால் வண்ணாரப்பேட்டை வெறிச்சோடி காணப்படுகின்றன
எப்பொழுதும் பரபரப்பாக போக்குவரத்து நெரிச்சலுடன் காணப்படும் திருவொற்றியூர் நெடுஞ்சாலை வண்ணாரப்பேட்டை பகுதிகளில் ஹோட்டல்கள் வணிக நிறுவனங்கள் அனைத்தும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன
ஜனநாயக திருவிழாவான மக்களவைத் தேர்தலில் மக்கள் தங்கள் வாக்கினை செலுத்துவதற்காக கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் வண்ணாரப்பேட்டை வெறிச்சோடி காணப்படுகின்றன