Homeசெய்திகள்தமிழ்நாடு'மக்களவைத் தேர்தல் 2024'- டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை!

‘மக்களவைத் தேர்தல் 2024’- டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை!

-

 

TASMAC - டாஸ்மாக்

மக்களவைத் தேர்தலையொட்டி, டாஸ்மாக் கடைகள், பார்களுக்கு 4 நாட்கள் விடுமுறை அளித்து டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

33 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரஜினியுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை!

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19- ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த நிலையில், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில், டாஸ்மாக் நிர்வாகம் அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் டாஸ்மாக் நிறுவனம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சுற்றறிக்கையில், “வரும் ஏப்ரல் 17, 18 மற்றும் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 19, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 04 ஆகிய நான்கு நாட்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் மற்றும் பார்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்” என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

சாய்பாபா கோவிலில் தரிசனம் செய்த நடிகர் விஜய்!

உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது டாஸ்மாக் நிர்வாகம்.

MUST READ