spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"14+1 தொகுதிகள் தரும் கட்சியுடன் கூட்டணி"- பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!

“14+1 தொகுதிகள் தரும் கட்சியுடன் கூட்டணி”- பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!

-

- Advertisement -

 

"14+1 தொகுதிகள் தரும் கட்சியுடன் கூட்டணி"- பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!

we-r-hiring

14 மக்களவைத் தொகுதிகள், 1 மாநிலங்களவை சீட் தருவோருடன் கூட்டணி என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

அனிருத்தின் இசையை புறக்கணிக்கும் நட்சத்திரங்கள்

தே.மு.தி.க.வின் மாவட்டச் செயலாளர்கள் உடனான ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “வரும் மக்களவைத் தேர்தலில் அதிக தொகுதிகள் தரும் கட்சியுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைக்கும். வேட்பாளர்கள், போட்டியிடும் தொகுதிகள் குறித்து இனிமேல் தான் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும்.

தடைகளை தாண்டி ஓடிடி தளத்திற்கு வருகிறது தி கேரளா ஸ்டோரி

எந்த கூட்டணியும் இதுவரை தேர்தல் கூட்டணி முடிவை எடுக்கவில்லை. நான்கு மண்டலங்களிலும் தே.மு.தி.க. சார்பில் மிகப்பெரிய அளவில் பொதுக்கூட்டம் நடத்தப்படும். 14 மக்களவைத் தொகுதிகள், 1 மாநிலங்களவை சீட் தருவோருடன் கூட்டணி வைக்க விரும்புகிறோம். வரும் பிப்ரவரி 12- ஆம் தேதிக்குள் தே.மு.தி.க.வின் கூட்டணி நிலைப்பாடு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ