Homeசெய்திகள்தமிழ்நாடுபெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவதில் தப்பில்லையே - சசிகலா காலில் விழுந்தது குறித்து ஈபிஎஸ் விளக்கம்!

பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவதில் தப்பில்லையே – சசிகலா காலில் விழுந்தது குறித்து ஈபிஎஸ் விளக்கம்!

-

பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவதில் தப்பில்லையே என சசிகலா காலில் விழுந்தது குறித்து அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்கள் மத்தியில் விளக்கம் அளித்துள்ளார்.

மதுரை மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மருத்துவர் சரவணுக்கான தேர்தல் பணிமனை அலுவலகத்தை எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் வேட்பாளர் சரவணன், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அமைச்சர் செல்லூர் ராஜீ மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார்கள். தொடர்ந்து பேசிய அவர், கூட்டணி தர்மத்தை பிடிக்கும் கட்சி அதிமுக. கூட்டணியில் இருப்பவர்களை நாங்கள் விமர்சிக்க மாட்டோம். கூட்டணியில் இருந்து விலகி வெளியே வந்த பிறகு மக்கள் நலத்திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் விமர்சிப்போம்.

எங்களை நம்பி யார் கூட்டணி வைத்தாலும் கடைசி வரை நாங்கள் விசுவாசமாக இருப்போம். தமிழகத்திற்கு எதிரான திட்டங்கள் இருந்தால் கண்டிப்பாக விமர்சிப்போம். மேலும் பேசிய அவர் தன் மீது குற்றம் சுமத்தியர்வர்களிடம் தான் கேட்க வேண்டும் என பிரச்சாரத்தின்போது மோடி, ஒன்றிய அரசை விமர்சனம் செய்யாதது குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி மழுப்பலாக பதிலளித்தார். ஜனநாயக நாட்டில் எல்லோரும் சமம், யார் வேண்டுமானலும் தேர்தலில் நிற்கலாம்.

தகுதி இருப்பதால்தான் இராமநாதபுரத்தில் 5 பன்னீர்செல்வம் போட்டியிடுகின்றனர். எத்தனை பன்னீர்செல்வம் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம். அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியது நான் எடுத்த முடிவு அல்ல, 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவு என கூறினார். மேலும் பேசிய அவர், யார் களமிறங்கினாலும் ஒட்டு மக்கள்தான் போட வேண்டும் என தமிழ்நாட்டில் பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகள் தேர்தலில் நிற்பது குறித்த கேள்விக்கு பதிலளித்தார். சசிகலா காலில் விழுந்ததற்கு விளக்கம் அளித்த அவர், நான் என்ன 3வது மனுஷன் காலிலா விழுந்தேன்..? பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்குவது தப்பில்லேயே என அவர் விளக்கம் அளித்தார்.

MUST READ