Homeசெய்திகள்தமிழ்நாடுநவீன எரிவாயு மேடையில் எரியூட்டப்பட்ட மருத்துவ மாணவரின் உடல்!

நவீன எரிவாயு மேடையில் எரியூட்டப்பட்ட மருத்துவ மாணவரின் உடல்!

-

- Advertisement -

 

நவீன எரிவாயு மேடையில் எரியூட்டப்பட்ட மருத்துவ மாணவரின் உடல்!
Video Crop Image

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உயிரிழந்த முதுநிலை மருத்துவ மாணவர் மதன்குமாரின் உடல், சொந்த ஊரான நாமக்கல்லில் எரியூட்டப்பட்டது.

“தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூபாய் 4,000 பேக்கேஜ்”- ராகுல் காந்தி அறிவிப்பு!

ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்ட மருத்துவ மாணவரின் உடல், அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம், மேலகவுண்டன்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.

பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், இறுதிச் சடங்கிலும் கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து, அவரது உடல் நவீன எரிவாயு மேடைக்கு கொண்டு செல்லப்பட்டு எரியூட்டப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மதிவேந்தன், “உயிரிழந்த மருத்துவ மாணவரின் பெற்றோர் வைத்த கோரிக்கை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்” என்றார்.

சொர்க்கவாசல் திறப்பு- நாள்தோறும் 50,000 பக்தர்கள் இலவச தரிசனம் செய்ய அனுமதி!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில், தடயவியல் மற்றும் மருத்துவத்துறையில் இரண்டாமாண்டு முதுநிலை மருத்துவம் படித்து வந்த மதன்குமார், விடுதியின் மாடியில் உடல் எரிந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டார்.

அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று மதன்குமாரின் நண்பர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

MUST READ