Homeசெய்திகள்தமிழ்நாடு"மக்கள் நலனுக்காக அயராது உழைத்தவர் எம்.ஜி.ஆர்."- பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்!

“மக்கள் நலனுக்காக அயராது உழைத்தவர் எம்.ஜி.ஆர்.”- பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்!

-

- Advertisement -
"உலக அளவில் இந்தியா விரைவில் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக முன்னேறும்"- பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை!
Photo: PM Narendra Modi
மக்கள் நலனுக்காக அயராது உழைத்தவர் எம்.ஜி.ஆர். என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
அ.தி.மு.க.வின் நிறுவனரும், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 107- வது பிறந்தநாளையொட்டி, அக்கட்சியினர் மற்றும் ரசிகர்கள் கேக் வெட்டியும், பொதுமக்கள் இனிப்புகள் மற்றும் அன்னதானத்தை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர பக்கத்தில், “தலைசிறந்த எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த தினத்தை நினைவு கூர்ந்து அவரது வாழ்க்கையை இன்று கொண்டாடுகிறோம். அவர் தமிழ் சினிமாவின் உண்மையான அடையாளமாகவும், தொலைநோக்கு மிக்க தலைவராகவும் இருந்தார். அவரது திரைப் படங்களில் நிறைந்திருந்த சமூக நீதி மற்றும் கருணை ஆகியவை, வெள்ளித்திரைக்கு அப்பாலும் இதயங்களை வென்றன.
 
 
தலைவராகவும், முதலமைச்சராகவும் மக்கள் நலனுக்காக அயராது உழைத்தவர், தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவரது பணி தொடர்ந்து நமக்கு ஊக்கம் அளிக்கிறது” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

MUST READ