Homeசெய்திகள்தமிழ்நாடு300 பேருக்கு டெங்கு உறுதி- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

300 பேருக்கு டெங்கு உறுதி- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

-

- Advertisement -

300 பேருக்கு டெங்கு உறுதி- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கோவை – கேரளா எல்லையான பொள்ளாச்சி மீனாட்சிபுரம் சோதனைச் சாவடியில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

Image

கேரளாவில் கண்டறியப்பட்ட நிபா வைரஸ் எதிரொலியாக தமிழக – கேரளா எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கோவை, நெல்லை, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்ட எல்லைகள் வழியாக தமிழகம் வருவோருக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை – கேரளா எல்லையில் உள்ள முக்கிய 6 சோதனைச் சாவடி வழியாக கோவை வருவோருக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவை பொள்ளாச்சி மீனாட்சிபுரம் சோதனைச் சாவடியில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியர், சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது எவ்வாறு பரிசோதனை மற்றும் விவரங்கள் சேகரிக்கப்படுகிறது என்பது குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் தமிழக – கேரளா எல்லையில் உள்ள 6 மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் கோவை வாளையாறு சோதனை சாவடி வழியாக கோவை வந்த 3,887 பேரிடம் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வருவோரிடம் பக்குவமாக பேசி பரிசோதனை செய்யப்படுகிறது.

Image

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை டெங்கு காய்ச்சல் இறப்பு 3 ஆக பதிவாகியுள்ளது. இறப்பு இருக்க கூடாது என்பதற்கு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறோம். நாளை மறுநாள் சென்னையில் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அரசு மருத்துவமனை டீன்கள், மாவட்ட சுகாதார துணை, இணை பொது சுகாதார அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். தமிழகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளோம். 9 மாதங்களில் 2.11 லட்சம் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. அதில் சராமரியாக 300 பேருக்கு டெங்கு உறுதியாகியுள்ளது” என்றார்.

MUST READ