spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்

-

- Advertisement -

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்

we-r-hiring

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 25 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், இலட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகின்றன.

இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தகவல் அளித்துள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய ஓரிரு இடங்களில் மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னனை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருச்சி, கரூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திண்டுக்கல், மதுரை, தேனி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனல்மின் நிலையத்தில் தீ விபத்து- அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

 

MUST READ