spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் இயல்பைவிட கூடுதலாக பெய்த தென்மேற்கு பருவமழை - வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் இயல்பைவிட கூடுதலாக பெய்த தென்மேற்கு பருவமழை – வானிலை மையம் தகவல்

-

- Advertisement -

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட கூடுதலாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை 4 மாதங்கள் வரை பெய்யும். தென்மேற்கு பருவ மழையால் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, தேனி, கோவை , நீலகிரி ஆகிய 4 மாவட்டங்கள் அதிகளவில் மழைப்பொழிவை பெறும்.

we-r-hiring

சேலத்தில் கால்வாய்க்குள் விழுந்த இளைஞரால் பரபரப்பு

இந்த நிலையில், கர்நாடகா, கேரளா, மகராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதேபோல், தமிழ்நாட்டிலும் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. அதன்படி ஜூன் 1 ஆம் தேதி முதல் இன்று வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 263.7 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

இந்த காலகட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் பெய்யும் சராசரி மழை அளவு 145.4 மில்லி மீட்டராகும். ஆகவே தற்போது வரை தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

MUST READ