
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் உள்ளதாக எழுந்த புகாரில் ஆணையம் விசாரணையைத் தொடரலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர் 2ஆவது நாளாக வேலை நிறுத்தம்!
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக பா.ஜ.க. நிர்வாகி சீனிவாசன், தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து, முரசொலி அறக்கட்டளை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தீர்ப்பு வழங்கினார். அதில், முரசொலி நிலம் தொடர்பான வழக்கில் தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
“ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கைத் தேவை”- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!
புதிதாக நோட்டீஸ் அனுப்பு விசாரணை நடத்த வேண்டும். அனைத்து தரப்புக்கும் வாய்ப்பளித்து விளக்கத்தைப் பெற்று விசாரணை நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.