நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை ஒதுக்கி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியானது!
கடந்த தேர்தல்களில் சீமானின் நாம் தமிழர் கட்சி ‘கரும்பு விவசாயி’ சின்னத்தில் போட்டியிட்டது. இந்த நிலையில், உரிய நேரத்தில் ‘கரும்பு விவசாயி’ சின்னத்தைக் கோரி நாம் தமிழர் கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கவில்லை. இதன் காரணமாக, அந்த சின்னம் வேறொரு கட்சிக்கு ஒதுக்கியது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம்.
முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளதாக விளக்கம் அளித்துள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம், நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பணிந்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி!
இதனால் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி ‘மைக்’ சின்னத்தில் போட்டியிடுகிறது. அந்த கட்சியின் வேட்பாளர்கள், நிர்வாகிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.