நெல்லை மாநகராட்சிக் கூட்டத்தில் நிர்வாகத்தைக் கண்டித்து கவுன்சிலர்கள் அல்வா வைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தள்ளிப் போகிறதா ‘புஷ்பா 2’ ரிலீஸ்?
நெல்லை மாநகராட்சிக் கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் துணைமேயர் ராஜு, மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய மாமன்ற உறுப்பினர்கள், தங்கள் தொகுதியில் எந்தவொரு பணிகளும் நடைபெறுவதில்லை எனக் கூறி, மாநகராட்சி நிர்வாகம் மீது அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
மேயர் மீது தங்களுக்கு நம்பிக்கையில்லாத காரணத்தால் மண்டலத் தலைவர்கள் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கியுள்ளதாகவும், பணிகள் குறித்து இந்த குழு மூலம் முடிவுச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, கூட்டத்தின் போது, தங்கள் வார்டு பகுதியில் குப்பைக் கூடங்களாகக் காட்சியளிப்பதாகக் கூறி, அந்த புகைப்படங்கள் அடங்கிய பதாகைகளுடன் அல்வாவையும் வைத்து மாமன்ற உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
ரசிகர்கள் எதிர்பார்க்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது?
நெல்லை மாநகராட்சியில் மேயர் மற்றும் துணை மேயர் வார்டுகளில் மட்டும் பணிகள் நடப்பதாகவும், மாமன்ற உறுப்பினர்களையும் சுழற்சி முறையில் மேயர், துணை மேயராக நியமனம் செய்யவும் கவுன்சிலர்கள் வலியுறுத்தியுள்ளனர். மாலை 05.00 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் இரவு 10.00 மணி வரை நீடித்தது.
நெல்லை மாநகராட்சியில் மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் இடையேயான மோதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு மேயர் சரவணனுக்கு எதிராக தி.மு.க. உறுப்பினர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இருப்பினும் இறுதி நேரத்தில் உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாததால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.