ரூ.20 கோடியில் கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம்!
ரூ.20 கோடியில் கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க தெற்கு ரயில்வே டெண்டர் கோரியது.
கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க தெற்கு ரயில்வே டெண்டர் கோரியுள்ளது. இந்த ரயில் நிலைய கட்டுமான பணிகள் அடுத்த 4 மாதத்திற்குள் தொடங்கப்படவுள்ளது. கிளாம்பாக்கத்தில் சுமார் 59.86 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து முனையத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் முடிந்து விரைவில் “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்” எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது. மேலும், கிளாம்பாக்கம் செல்லும் பயணிகளின் வசதிக்காக புதிய ரயில் நிலையம் கடந்த ஜுன் மாதம் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஒப்புதல் அளித்தது.
இதன்படி, புதிதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பொதுமக்களின் போக்குவரத்து இணைப்பினை மேம்படுத்த, தாம்பரம்-செங்கல்பட்டு புறநகர் வழித்தடத்தில் , வண்டலூர் – ஊரப்பாக்கம் இடையில் புதிய புறநகர் ரயில் நிலையம் அமைக்க தெற்கு ரயிலேவே ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.20 கோடி செலவில் அமைய உள்ள இந்த பணிகளை ரயில்வே மேற்கொள்ளவதற்கான நிதியை சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் ரயில்வே நிர்வாகத்திற்கு வழங்கிய. அதன்படி, 3 நடைமேடைகள் கொண்ட ரயில் புதிய ரயில் நிலையம், நடைமேடைகள் அமைப்பது தொடர்பான நிரந்தர பணிகளை மேற்கொள்ள தெற்கு ரயில்வேவ டெண்டர் கோரியுள்ளது. இன்னும் 2 மாதத்தில் டெண்டர் இறுதி செய்யப்பட்டு, அடுத்த 2 மாதத்தில் பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.