- Advertisement -
தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை
நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் கன்னிமாரியம்மன் கோவில் தெரு அருகில் உள்ள வனப்பகுதியில் மரத்தில் ஒன்றில் தூக்கிலில் தொங்கிய நிலையில் ஆண் பிணம் கிடப்பதாக குன்னூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு லாலி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் தற்கொலை செய்தவருக்கு 65 வயது இருக்கும், இவர் எதற்காக தூக்கிலிட்டுக் கொண்டார், இவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடல் அடையாளம் தெரிவதற்காக வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.