யுஜிசி பிரதிநிதியை தவிர்த்து விட்டு துணைவேந்தர் தேடுதல் குழுவை அமைத்து அரசாணை வெளியிட்டது தவறு என்றும் யுஜிசி பிரதிநிதியை சேர்த்து புதிய அரசாணையை வெளியிட வேண்டும் எனவும் ஆளுநர் மாளிகை அறிவுறுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) பிரதிநிதியை சேர்ப்பது தொடர்பாக ஆளுநர் மற்றும் மாநில அரசு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகம், கல்வியியல் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர் பதவிகள் காலியாக உள்ள நிலையில், தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதியை சேர்க்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவிட்டுள்ளார். இதற்கு, தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதியை சேர்ப்பது கட்டாயமில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வெறியாட்டம்… ஒரே இரவில் 337 ட்ரோன்களை ஏவிய உக்ரைன்: அதிர்ந்துபோன ரஷ்யா