மீன்பிடி தடைக்காலம் நாளை நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், பாம்பன் தூக்கு பாலம் அருகே விசைப்படகு விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியுள்ளது. இதனை அடுத்து நாளை மறுநாள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லலாம் என்று மீன்வளத்துறை அனுமதி அளித்துள்ளது.பாம்பன் தூக்கு பாலம் அருகே விசைப்படகு விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியுள்ளது. பாம்பன் தெற்கு பகுதியில் மண்டபம் பகுதி மீனவர்கள் படகில் மராமத்து செய்து தங்களுக்கு சொந்த இடமான மண்டபத்திற்கு எடுத்து செல்வதற்காக இன்று காலை 9.30 மணியளவில் மண்டபம் தெற்கு கடற்கரையிலிருந்து வடக்கு கடற்கரைக்கு பாம்பன் தூக்கு பாலம் வழியாக சென்றுள்ளனா்.
ஆனால் பாம்பன் தூக்கு பாலம் தூக்காத நிலையில், படகின் எடையை குறைக்க, பெரிய கேன்களில் நீரை நிரப்பி உள்ளனர். அச்சமயத்தில் காற்றின் வேகம் அதிகரித்ததால் படகில் உள்ள கேன்களில் உள்ள நீர் படகினுள் விழுந்து படகு மூழ்கியுள்ளது. இந்நிலையில் படகிலிருந்த 6 மீனவர்களை அகம் மீனவர்கள் உடனடியாக மீட்டனர். மூழ்கிய படகையே மீனவர்களின் பாதுகாப்பாக காப்பதற்காக சக மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் படகை மீட்கும் பணிகளிலும் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.