Homeசெய்திகள்தமிழ்நாடுவேளாண் கண்காட்சியை துவங்கி வைத்த முதல்வர்...

வேளாண் கண்காட்சியை துவங்கி வைத்த முதல்வர்…

-

- Advertisement -

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்  பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னை  விமான நிலையத்திலிருந்து  விமானம் மூலமாக கோவை விமான நிலையம் புறப்பட்டு சென்றார்.50,000 விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள்... முதல்வரின் 2 நாள் பயணம்...ஈரோடு மற்றும் சேலம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையம் புறப்பட்டு சென்றார். காலை 11 மணியளவில் கோவை விமான நிலையம் சென்றடைந்த முதல்வா் அங்கிருந்து சாலை வழியாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை சென்று அங்கு நடைபெறும் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை தொடங்கி வைத்ததோடு,  ஐம்பதாயிரம் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகினாா்.

அங்கிருந்து  மாலை சேலம் செல்லும் முதல்வருக்கு வழி நெடுங்கிலும் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  11  கிலோ மீட்டர் ரோட் ஷோ நிகழ்ச்சியிலும் முதல்வர் பங்கேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சியை முடிவடைந்தவுடன் இரவு மேட்டூர் அரசு விருந்தினர் மாளிகையில் முதல்வா் தங்குகிறாா். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜூன் 12ம் தேதி) காலை 9.30 மணிக்கு மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார்.

அதனைத் தொடர்ந்து சேலம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஒரு லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் நாளை மாலை சென்னை திரும்ப உள்ளார்.

பாமகவின் பரிதாப நிலை.. அன்புமணி ஆதரவாளரை கிண்டல் செய்து வீடியோ வெளியிட்ட ராமதாஸ் அணி…

 

MUST READ