செங்கல்பட்டு மாவட்டம் ஒரகடம் அருகே சரக்கு ஆட்டோ மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் தனியார் தொழிற்சாலைகளுக்கு உணவு தயாரிக்கும் கேண்டின செயல்பட்டு வருகிறது. இந்த கேண்டினில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள பணிபுரியும் நிலையில், அவர்கள ஒரகடம் அடுத்த மாத்தூர் பகுதியில் தங்கி வேலைக்கு சென்று வந்தனர். இந்நிலையில் இன்று காலை 10க்கும் மேற்பட்ட ஊழியர்களை சரக்கு வேனில் பணிக்கு சென்று கொண்டிருந்தனர்.


மாத்தூர் அருகே சாலையை கடக்கும்போது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த கண்டெய்னர் லாரி சரக்கு வேன் மீது மோதியது. இதில் வேன் கவிழ்ந்த நிலையில், பின்னால் வந்த தனியார் தொழிற்சாலை பேருந்து அதன் மேல் மோதியது.இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் ஜண்ட்டு மண்டல் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 5க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். ஒரகடம் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துமேலும் கிரேன் உதவியுடன் சாலையில் கவிழ்ந்த வாகனத்தை அப்புறப்படுத்தினர்.