அ.தி.மு.க. பொதுக்குழுத் தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 25) தீர்ப்பளிக்கிறது.
‘சந்திரமுகி 2’ இசை வெளியீட்டு விழா அப்டேட்!
அ.தி.மு.க. பொதுக்குழுவில் தங்களை நீக்கியும், எடப்பாடி பழனிசாமியை இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்வுச் செய்தது உள்ளிட்டத் தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெறும் முதல் தெலுங்கு நடிகர்….நெகிழ்ச்சியில் அல்லு அர்ஜுன்!
இதன் மீது ஏழு நாட்கள் வாதங்கள் நடைபெற்ற நிலையில், கடந்த ஜூன் 28- ஆம் தேதி அன்று நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்த நிலையில், நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் கொண்ட அமர்வு இன்று (ஆகஸ்ட் 25) காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறது.