திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோயிலில் பக்தர்களின் வசதிக்காகக் கூடுதலாக ஆம்புலன்ஸ் மற்றும் பேட்டரி வாகனங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
“வாக்களிக்க வேண்டாம்” என மக்களிடம் கேட்டுக் கொண்ட மாவோயிஸ்டுகள்!
பழனி முருகன் கோயிலில் நீதிமன்ற உத்தரவின்படி, கிரிவல வீதிகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து, பக்தர்கள் எளிதாக மலை கோயிலுக்கு செல்லும் வகையில் ஒரு பேட்டரி வாகனம் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கூடுதல் பேட்டரி வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் இயக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில், சுமார் 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய ஆம்புலன்ஸ் வாகனமும், அமெரிக்க பக்தர் சார்பில் வழங்கப்பட்ட பேட்டரி வாகனமும் பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!
இந்த வாகனங்கள் பக்தர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று பழனி முருகன் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.