Homeசெய்திகள்தமிழ்நாடு'பெரியார் நினைவுத் தினம்'- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

‘பெரியார் நினைவுத் தினம்’- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

-

 

'பெரியார் நினைவுத் தினம்'- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
Photo: TN Govt

தந்தை பெரியாரின் 50- வது ஆண்டு நினைவுத் தினத்தையொட்டி, சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (டிச.24) காலை 11.00 மணிக்கு மலர்தூவி மரியாதைச் செலுத்தினார்.

நாகூர் தர்கா விழா…. ஆட்டோவில் வந்து கலந்து கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான்!

அதைத் தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேகர்பாபு, துரைமுருகன் மற்றும் தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதைச் செலுத்தினர்.

தந்தை பெரியாரின் நினைவுத் தினத்தையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “பண்பாட்டு ரீதியாக ஒடுக்கப்பட்டு, அடையாளங்கள் சிதைக்கப்பட்ட தமிழினத்தின் சுயமரியாதையைத் தட்டியெழுப்பி, சமத்துவ நெறியே தமிழர் நெறி எனப் பகுத்தறிவுப் பாதையில் நம்மையெல்லாம் நடைபோடச் செய்த தந்தை பெரியாரின் புகழைப் போற்றுவோம்!

ஜெயிலரைத் தொடர்ந்து நெல்சனின் அடுத்த படம்…. அவரே கொடுத்த அப்டேட்!

“கணந்தோறும் இப்பெரிய தமிழ்நாடு எதிர்பார்க்கும் தலைவர் பெரியார்” என்று பாவேந்தர் பாடியதைக் காலந்தோறும் முழங்குவோம்! வீறுகொண்டு எழுந்த நாம் ஒருபோதும் வீழமாட்டோம் எனச் சூளுரைத்து வீணர்களை வீழ்த்துவோம்!” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ