Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு சிக்கல்!

அமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு சிக்கல்!

-

 

அமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு சிக்கல்!
File Photo

அமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி ஆகியோர் சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வுச் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

“சென்னை, நீலகிரி மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்”- தமிழக அரசு உத்தரவு!

கடந்த 2008- ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வீட்டுவசதி வாரிய அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான சொத்துகளை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலரான கணேசனுக்கு முறைகேடாக ஒதுக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரத்தில், கடந்த 2012- ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஐ.பெரியசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை சொத்துக்குவிப்பு வழக்கைப் பதிவுச் செய்திருந்தது. நீண்ட வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டார்.

இதனிடையே, கடந்த 2001- ஆம் ஆண்டு முதல் 2006- ஆம் ஆண்டு காலத்தில் தமிழக சமூக நலத்துறை அமைச்சராக இருந்த பா.வளர்மதி மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் சொத்துக்குவிப்பு வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இருந்து பா.வளர்மதி உள்ளிட்டோரை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், கடந்த 2012- ஆம் ஆண்டு விடுவித்தது.

“கருத்துக் கூற அமைச்சர் உதயநிதிக்கு உரிமை உண்டு”- கமல்ஹாசன்!

ஐ.பெரியசாமி, பா.வளர்பதி ஆகியோரை விடுவித்துப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வுச் செய்யும் வகையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார். இந்த வழக்குகள் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ