![H1B விசா குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி.... மகிழ்ச்சியில் இந்தியர்கள்!](https://www.apcnewstamil.com/wp-content/uploads/2023/06/NARENDRA-MODI4343-1.jpg)
பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெண்மையின் மேன்மையைப் போற்றுவோம்- எடப்பாடி பழனிசாமி மகளிர் தின வாழ்த்து!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாகும் எனக் கூறப்படும் நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த சூழலில், பிரதமர் நரேந்திர மோடி வரும் மார்ச் 22- ஆம் தேதி அன்று தமிழகம் வரவுள்ளதாகவும், பா.ஜ.க. சார்பில் நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மருமகனை வேன் மோதி கொல்ல முயன்ற மாமனார்!
நடப்பாண்டில் மூன்று மாதங்களில் ஐந்தாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார். எனினும், தமிழகத்தில் எந்த மாவட்டத்திற்கு வருகை தருகிறார் பிரதமர், எந்தெந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.