spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking Newsபொங்கல் பரிசுத்தொகுப்பு: ஜன.3 முதல் டோக்கன் விநியோகம் - தமிழக அரசு

பொங்கல் பரிசுத்தொகுப்பு: ஜன.3 முதல் டோக்கன் விநியோகம் – தமிழக அரசு

-

- Advertisement -

பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோக பணிகளுக்காக ஜனவரி 3ம் மற்றும் 10ம் தேதி ரேசன் கடைகள் செயல்படும் என கூட்டுறவுத்துறை அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பொங்கல் பரிசுத்தொகுப்பு: ஜன.3 முதல் டோக்கன் விநியோகம் - தமிழக அரசுவரும், 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.21 கோடி அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.

we-r-hiring

ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜனவரி 9ம் தேதி முதல் பொங்கல் பரிசு வினியோகம் துவங்கும். அதற்காக ஒவ்வொரு கார்டுதாரருக்கும் முன்கூட்டியே, ‘டோக்கன்’ வழங்கப்படும். அதில் குறிப்பிடப்படும் நாள், நேரத்திற்கு சென்று பொருட்களை பெறலாம் என அறிவித்த நிலையில் தற்போது பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோக பணிகளுக்காக ஜனவரி 3ம் மற்றும் 10ம் தேதி ரேசன் கடைகள் செயல்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.

இதற்கு மாற்றாக ஜனவரி 15 மற்றும் பிப்ரவரி 22ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும்… மாற்றங்கள் மலரட்டும்… – என்.கே.மூர்த்தி

MUST READ