spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபி.ஆர்.பாண்டியன் கைதுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

பி.ஆர்.பாண்டியன் கைதுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

-

- Advertisement -

 

நாங்கள் யார் என்பதை மதுரை மாநாட்டில் நிருபிப்போம் - அதிமுக தொண்டர்கள் உற்சாகம்..
File Photo

சென்னையில் விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கைது செய்யப்பட்டதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

ஆயிரம் கோடியை வசூல் செய்து சாதனை படைத்த ‘ஜவான்’ திரைப்படம்

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை முன்னெத்தும், தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தியும் இன்று சென்னை மெரினா சாலையில் தேசிய கொடியை கையில் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் பி.ஆர்.பாண்டியன் மீது தாக்குதல் நடத்தியும், வலுக்கட்டாயப்படுத்தியும் கைது செய்திருக்கும் இந்த விடியா தி.மு.க. அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

“மருத்துவ ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குக”- அண்ணாமலை வலியுறுத்தல்!

விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு கூட செவிமடுக்க மறுக்கும் இந்த அரசு இருந்தென்ன இல்லை என்றால் என்ன? தனது உடல் பொருள் ஆவி அனைத்தையும் மக்களுக்காகவே அர்ப்பணித்து வரும் விவசாயிகள் மீது அடக்குமுறையை கையாள்வதை ஒருநாளும் ஏற்றுக் கொள்ள முடியாது என இந்த அரசை மீண்டும் ஒரு முறை கண்டிப்பதுடன், இனியும் விவசாய சங்கங்கள் மீது இத்தகைய அடக்குமுறையை கையாண்டால் இந்த அரசு கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ