Homeசெய்திகள்தமிழ்நாடுதனியார் மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தனியார் மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

-

 

தனியார் மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை திருவேற்காடு அருகே செயல்பட்டு வரும் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் புதிய சாதனை படைத்த விராட் கோலி!

வேலப்பன்சாவடியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவக் கல்லூரி அலுவலகத்திற்கு கடிதம் ஒன்று வந்துள்ளது. அதனை பிரித்து பார்த்தபோது, ஒரு கோடி ரூபாய் கொடுக்கவில்லை என்றால் 4 மணி நேரத்தில் கல்லூரியில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கல்லூரி ஊழியர்கள், வேலப்பன்சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் மூலம் கல்லூரி வளாகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். அத்துடன், காவல்துறையினரும் கடிதத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர், அதில், வேலூர் மாவட்டத்தில் இருந்து கடிதம் மூலம் தபால் வந்துள்ளதாகவும், லட்சுமணன் என்பவரது பெயரில் கடிதம் அனுப்பியிருப்பதும் தெரிய வந்தது.

மற்றொரு ஆட்டத்தில் லக்னோvsகுஜராத் அணிகள் பலப்பரீட்சை!

நீண்ட நேர சோதனைக்கு பிறகு வெடிகுண்டு எதுவும் கிடைக்காததால் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்துள்ளது. தற்போது, அந்த கல்லூரியின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் வேலூர் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் நிலையில், மிரட்டல் விடுக்கும் வகையில் கடிதம் வந்துள்ளதா என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ