spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"மழைநீர் வடிகால்- வெள்ளை அறிக்கை தேவை"- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

“மழைநீர் வடிகால்- வெள்ளை அறிக்கை தேவை”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

-

- Advertisement -

 

எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
File Photo

மழைநீர் வடிகால் பணிகள், தொடர்ந்து மீட்புப் பணி நடக்கும் இடங்கள் குறித்து வெள்ளை அறிக்கை தேவை என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

we-r-hiring

‘கே.ஜி.எஃப்-3’ நிச்சயம் வரும்… அடித்துச் சொல்லும் பிரசாந்த் நீல்!

இது குறித்து அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மழை நின்று மூன்று நாட்கள் ஆன நிலையில், இப்போது வரை சென்னை மாநகரப் பகுதிகளில் உள்ள சுமார் 38,500 பிரதான உட்புற சாலைகளில், சுமார் 20,000 சாலைகளில் மழை வெள்ளம் தேங்கியுள்ளது. அதேபோல், சென்னையைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் வெள்ளம் வடியாமல், மழைநீர் வடியாமல், கழிவுநீருடன் கலந்து தொற்று நோய் பரவும் அபாயத்தில் உள்ளது.

சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆவின் பால் விநியோகத்தை சீர் செய்யவும், அண்டை மாநிலங்களில் இருந்து பாலை உடனடியாகக் கொள்முதல் செய்து மக்களுக்குத் தங்கு தடையின்றி பால் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வகையில் அரிசி, பருப்பு, பால், மளிகைப் பொருட்கள் மற்றும் தேவையான மருத்துவ வசதிகளை உடனடியாக வழங்கிடவும் இந்த தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

வெள்ளத்தில் கலந்த கெமிக்கலால் மக்கள் படும் அவதி….விஜய் மக்கள் இயக்கத்தினரின் நெகிழ்ச்சி செயல்!

சென்னை மாநகரில் சுமார் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெள்ளநீர் வடிகால் பணிகள் நடந்தாக இந்த தி.மு.க. அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. நடந்து முடிந்த பணிகளின் பட்டியலை வெளியிட இந்த அரசு தயாரா? பணி முடிந்த ஒவ்வொரு இடத்துக்கும் செலவிட்ட தொகை கணக்கை தரத் தயாரா? பணிகள் 100 சதவீதம் முடிந்த இடங்கள், தொடர்ந்து பணி நடைபெறும் இடங்கள் குறித்து வெள்ளை அறிக்கை ஒன்றை விடியா தி.மு.க. அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும். ஏதாவது சொல்லி, ஏமாற்றி தப்பித்துவிடலாம் என்று இந்த நிர்வாகத் திறனற்ற ஆட்சியாளர்கள் நினைத்தால், அதற்குண்டான பதிலை பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் வெளிப்படுத்துவார்கள் என்று எச்சரிக்கிறேன்.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ