நாளை (ஜன.22) அயோத்தி ராமர் கோயிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் பொது இடங்களில் அனுமதியின்றி ராமர் கோயில் சிலைத் திறப்பை ஒளிபரப்புச் செய்யத் தடை விதித்து தமிழக காவல்துறை.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் பூர்ணிமா ரவி நடிக்கும் புதிய படம்…. விரைவில் வெளியாகும் பர்ஸ்ட் லுக்!
தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் பொது இடங்களில் ராமர் கோயில் நிகழ்ச்சியை நேரலைச் செய்ய அனுமதி இல்லை. திருமண மண்டபங்கள், பொது இடங்களில் நேரலை செய்ய அனுமதி இல்லை. தனியார் அறக்கட்டளை கோயில்கள், மடங்கள் போன்றவற்றில் நிகழ்ச்சியை ஒளிபரப்பலாம். அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களில் அதிகாரிகள் அறிவுறுத்தலின் படி ஒளிபரப்பலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை ஷகிலா மீது தாக்குதல்… வளர்ப்பு மகள் மீது புகார்…
ராமர் கோயில் நேரலையை ஒளிபரப்ப தமிழக அரசு தடை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், காஞ்சிபுரத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிக்கும் காவல்துறை அனுமதி மறுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.