Homeசெய்திகள்தமிழ்நாடுவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்: குடும்ப அட்டைகளுக்கு தலா ரூ. 2000 - தமிழக அரசு அறிவிப்பு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்: குடும்ப அட்டைகளுக்கு தலா ரூ. 2000 – தமிழக அரசு அறிவிப்பு!

-

- Advertisement -

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்: குடும்ப அட்டைகளுக்கு தலா ரூ. 2000 - தமிழக அரசு அறிவிப்பு!

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கடந்த 30 ஆம் தேதி புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இதனால் தமிழகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு மேல் மழை கொட்டித் தீர்த்தது. அதனால் வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கிட

ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கிட தமிழக அரசு திட்மிட்டுள்ளது.

இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையில்,

⦿ புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 5 இலட்சம் ரூபாய் வழங்கப்படும்.

⦿ சேதமடைந்த குடிசைகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய 10 ஆயிரம் வழங்கப்படும்.

⦿ முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடுகட்டுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

⦿ மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 17 ஆயிரம் வழங்கப்படும்.

⦿ பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் (Perennial crops and trees)சேதமுற்றிருப்பின் (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 22,500 வழங்கப்படும்.

⦿ மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.8,500-ஆக வழங்கப்படும்.

⦿ எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக

⦿ ரூ.37,500 ஆக வழங்கப்படும்.

⦿ வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக ரூ.4,000- வழங்கப்படும். கோழி உயிரிழப்பு நிவாரணமாக ரூ.100 வழங்கப்படும்.

⦿ அதி கனமழையின் காரணமாக கடுமையான மழைப்பொழிவினை சந்தித்துள்ள  விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்படும்.

⦿ மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சான்றிதழ்கள், வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டைகளை இழந்தவர்களுக்கு, சிறப்பு முகாம்கள் நடத்தி புதிய சான்றிதழ்கள் வழங்கப்படும்.

⦿ மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதிப்புக்குள்ளான குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் நிவாரணம் வழங்குவது தொடர்பாக தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தங்கள் மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளின் விவரங்களை அரசுக்கு அனுப்பி வைத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதானிக்கு ஆந்திரா தடை விதித்தால் என்ன நடக்கும்..? ரூ.1.61 லட்சம் கோடியை திருப்பி தருமா..?

 

MUST READ