Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு!

தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு!

-

- Advertisement -

 

பள்ளி மாணவர்கள்
File Photo

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நாளை (டிச.11) தொடங்கவிருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையை உலுக்கிய மிக்ஜாம் புயல்- விஜய் டிவி புகழ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “டிசம்பர் 11- ஆம் தேதி அரையாண்டுத் தேர்வு தொடங்கவிருக்கும் நிலையில், புத்தகங்கள் இல்லாமல் மாணவர்கள் தேர்வுக்கு படித்து தயாராக முடியாது என்ற நிலையினை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் நாளை (டிச.11) தொடங்கவிருக்கும் தேர்வுகளை டிசம்பர் 13- ஆம் தேதி அன்று தொடங்க வேண்டுமென பள்ளிக்கல்வித்துறைக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வித் துறையால் அரையாண்டுத் தேர்வுகளுக்கான புதிய கால அட்டவணையை வெளியிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ