Homeசெய்திகள்தமிழ்நாடுஎங்கள் நாட்டின் பெயர் தமிழ்நாடு தான்- சீமான்

எங்கள் நாட்டின் பெயர் தமிழ்நாடு தான்- சீமான்

-

எங்கள் நாட்டின் பெயர் தமிழ்நாடு தான்- சீமான்

ஒரே நாடு என்றால் ஏன் தமிழகத்திற்கு காவிரியில் கர்நாடகா தண்ணீர் தர மறுக்கிறது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை வளசரவாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “என் நாடு தமிழ்நாடு. பாரத் என்று அழைப்பது வசதியாய் இருப்பதால் அப்படி அழைக்கிறார்கள். நாங்கள் தமிழர்கள், இது என் நாடு தமிழ்நாடு. பாரத் என அவர்களது நாட்டிற்கு பெயர் வைத்துள்ளனர். எங்கள் நாட்டின் பெயர் தமிழ்நாடுதான்.  சனாதன ஒழிப்பை பற்றி பேசும் திமுக, அதற்கான முயற்சியை எடுக்கவில்லை. உதயநிதியின் தலைக்கு விலை அறிவித்த சாமியாரின் தலையை சீவினால் நான் ரூ.100 கோடி தருகிறேன். தலையை வெட்டு, நாக்கை வெட்டு என்று சொன்னால் அவர் சாமியார் அல்ல கசாப்பு கடைக்காரர்

ஒரே நாடு, ஒரே தேர்தல் போல் ஏன் ஒரே நீர் இல்லை? ஒரே நாடு என்று பேசுபவர்களால் ஏன் காவிரி நீரை பெற்று தர முடியவில்லை? ஒரே நாடு என்றால் ஏன் தமிழகத்திற்கு காவிரியில் கர்நாடகா தண்ணீர் தர மறுக்கிறது. நாற்பது தொகுதியிலும் தனித்து போட்டி போடுவேன். என் தாய் நிலத்தில் மோடி போட்டியிட்டால் நானே எதிர்த்து போட்டியிடுவேன். ஒரு வேளை திமுக, மோடியை எதிர்த்து போட்டியிட ஒரு வலுவான வேட்பாளரை போட்டால் அந்த ஒரு தொகுதியில் மட்டும் ஆதரிப்பேன்.

Seeman - சீமான்

ஒரே நாடு ஒரே தேர்தலை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆதரித்தார். ராமேஷ்வரத்தில் தாமரை, சூரியன் நேரடியாக போட்டியிட்டால் எனது வேட்பாளரை திரும்ப பெறுவேன். நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசை கூட்டணியில் இருந்து வெளியேற்றுங்கள், நான் முழுமையாக திமுகவுக்கு ஆதரவு தருகிறேன்” என்றார்.

MUST READ