spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசெந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை விசாரணைக்கு தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு!

செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை விசாரணைக்கு தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு!

-

- Advertisement -

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது- ஜூன் 28 வரை நீதிமன்றக் காவல்!

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான அமலாக்கத் துறை விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

we-r-hiring

சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடை வழக்கில் கடந்த 2023- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14- ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னையில் உள்ள புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுமார் 9 மாத காலமாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடியாகின.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான அமலாக்கத் துறை விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. அமலாக்கத்துறை வழக்கை தள்ளிவைக்கக் கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த மறுஆய்வு மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரணை நடத்தியது. சிறப்பு நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்பளிக்கும் வரை ED வழக்கை தள்ளிவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

MUST READ