Homeசெய்திகள்தமிழ்நாடுசெந்தில் பாலாஜி மனைவியின் ஆட்கொணர்வு மனு- 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

செந்தில் பாலாஜி மனைவியின் ஆட்கொணர்வு மனு- 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

-

- Advertisement -

செந்தில் பாலாஜி மனைவியின் ஆட்கொணர்வு மனு- 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

நீதிபதி பரத சக்கரவர்த்தி செந்தில்பாலாஜி மனைவி மேகலா மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

senthilbalaji

சட்டவிரோத கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி செந்தில் பாலாஜியை விடுவிக்க வேண்டும் என்று அவருடைய மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரித்துவருகிறது. அந்த மனுவில் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி மேகலா கூறியிருந்தார்.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் இன்று வழங்கினர். அதன்படி, நீதிபதி பானு, செந்தில்பாலாஜி கைது சட்டவிரோதம், உடனே விடுவிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினார். நீதிபதி பரத சக்ரவர்த்தி சிகிச்சை முடிந்தபின், குணம் அடைந்தபின் செந்தில் பாலாஜியை சிறையில் அடைக்க வேண்டும் எனக்கூறி செந்தில்பாலாஜி மனைவி மேகலா மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இரண்டு நீதிபதிகளின் வேறு வேறு தீர்ப்பால் வழக்கு வேறு ஒரு அமர்வுக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது

MUST READ