spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசெந்தில் பாலாஜியை இன்னும் காவலில் எடுக்கவில்லை- அமலாக்கத்துறை

செந்தில் பாலாஜியை இன்னும் காவலில் எடுக்கவில்லை- அமலாக்கத்துறை

-

- Advertisement -

செந்தில் பாலாஜியை இன்னும் காவலில் எடுக்கவில்லை- அமலாக்கத்துறை

அமைச்சர் செந்தில் பாலாஜியை இன்னும் காவலில் எடுக்கவில்லை என அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.

சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனையில் ஈடுபடுத்தப்பட்டதாக செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இதற்கிடையே, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், முதலில் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் காவேரி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நாளை இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. இதய பாதிப்பு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. எட்டு நாள் காவல் முடிந்து வரும் ஜூன் 23- ஆம் தேதி அன்று மாலை 03.00 மணிக்கு வீடியோ கான்பிரன்ஸ் மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்த வேண்டும் என்று அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

we-r-hiring
பக்காவாக பிளான் போட்ட அமலாக்கத்துறை! படுத்துக்கொண்டு காலி செய்த செந்தில்பாலாஜி! பரபரப்பு பின்னணி
மருத்துவமனையில் செந்தில்பாலாஜி

ஆனால் அமைச்சர் செந்தில்பாலாஜியை காவலில் எடுக்க முடியவில்லை என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி அமர்வில் அமலாக்கத்துறை முறையீடு செய்துள்ளது. உடல்நிலையை கருத்தில் கொண்டு செந்தில்பாலாஜியை காவலில் எடுக்க முடியவில்லை எனவும், நாளைய உச்சநீதிமன்ற விசாரணைக்கு பிறகே காவலில் எடுப்பது பற்றி நீதிமன்ற உத்தரவு படி முடிவெடுக்கப்படும் எனவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

MUST READ