Homeசெய்திகள்தமிழ்நாடு'ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி திருக்கோயிலுக்கு உள்ளே தாக்குதல்'- ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!

‘ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி திருக்கோயிலுக்கு உள்ளே தாக்குதல்’- ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!

-

- Advertisement -

 

OPS

ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் சுவாமி திருக்கோயிலுக்கு உள்ளே தாக்குதல் நடைபெறும் அளவுக்கு தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கைச் சீரழித்துள்ள தி.மு.க. அரசிற்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் வண்ணப்புகைத் தாக்குதல் கவலை அளிப்பதாக ராமதாஸ் ட்விட்

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான கொடுமைகள், பாலியல் துன்புறுத்தல், அரசு ஊழியர்களை மிரட்டுதல், தொழிலதிபர்களை மிரட்டுதல், ஆணவக் கொலை போன்றவை கடந்த இரண்டரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கின்ற நிலையில், பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் சுவாமி திருக்கோயிலுக்குள்ளேயே அய்யப்ப பக்தர்கள்மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பக்தர்களிடையே பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயிலுக்குள் இதுபோன்றதொரு தாக்குதல் அய்யப்ப பக்தர்கள்மீது நடைபெற்றிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

அறம் வளர்த்த பண்பாட்டு நினைவுச் சின்னங்களாகவும்; இயல், இசை, நாடகக் கலைகளை வளர்த்த மையங்களாகவும்; ஓவிய, சிற்பக் கூடங்களாகவும்; வரலாற்றுச் சின்னங்களாகவும், அமைதியின் பிறப்பிடமாகவும், பொதுமக்களின் துன்பங்களை, துயரங்களை போக்குமிடமாகவும் விளங்குபவை திருக்கோவில்கள். இப்படிப்பட்ட திருக்கோவில்களிலேயே கொடூரத் தாக்குதல், அடிதடி என்றால், அந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு தமிழ்நாட்டில் சந்தி சிரிக்கிறது.

“சபரிமலை வரும் தமிழக பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்”- கேரளா அரசு உறுதி!

“கோயில் கொடியவர்களின் கூடாரமாகி விடக்கூடாது” என்று வசனம் எழுதியவரின் வழியில் நடக்கும் ஆட்சியில் கோயில் அல்ல, தமிழ்நாடே கொடியவர்களின் கூடாரமாகி விடும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாக விளங்குவது சட்டம் ஒழுங்குதான் என்பதைக் கருத்தில் கொண்டு, திருக்கோயில்களில் இதுபோன்ற தாக்குதல் இனி வருங்காலங்களில் வராமல் பார்த்துக் கொள்ளவும், சட்டம்-ஒழுங்கை சீராக்குவதற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்திடுமாறும் முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ