Homeசெய்திகள்தமிழ்நாடுமுதலமைச்சருக்கு ‘நன்றி கடிதம்' எழுதிய 3ம் வகுப்பு மாணவி!

முதலமைச்சருக்கு ‘நன்றி கடிதம்’ எழுதிய 3ம் வகுப்பு மாணவி!

-

தென்காசியை சேர்ந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

aradhana

திப்பணம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் ஆராதனா என்ற மாணவி, தான் அனுப்பிய மனுவை ஏற்று பள்ளிக்கு நிதி ஒதுக்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், “நான் அனுப்புன மனுவை ஏற்றுக்கொண்டு எனது பள்ளிக்கு நிதி துக்கிய முதலமைச்சர் ஐயாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதே பள்ளியில் படித்து பெரிய ஆளா ஆகணும்னு சொன்னீங்க… ஐயா நிச்சயம் அதே மாதிரி நான் ஆவேன் ஐயா. அப்போதும் நீங்களே முதலமைச்சராக இருக்கணும் ஐயா….

எங்க அம்மா, அப்பா, ஊர் மக்கள் என்னோட நண்பர்கள் எல்லோரும் சந்தோச பட்டாங்க ஐயா, உங்கள நேர்ல சந்தித்து நன்றி தெரிவிக்க ஆசையா இருக்கு ஐயா!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் பள்ளி கட்டிடத்தின் நிலைமையை சுட்டிக்காட்டி ஆராதானா கடிதம் எழுதியிருந்தார். இதுகுறித்து நிகழ்ச்சி மேடையிலேயே கூறிய முதலமைச்சர் முக ஸ்டாலின், பள்ளி கட்டிடம் கட்டித்தர நிதி ஒதுக்கினார் என்பது குறிப்பிடதக்கது.

MUST READ