Homeசெய்திகள்தமிழ்நாடுகோடைக்கால கடுமையான வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க செய்ய வேண்டியவை!

கோடைக்கால கடுமையான வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க செய்ய வேண்டியவை!

-

- Advertisement -

 

கோடைக்கால கடுமையான வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க செய்ய வேண்டியவை!
File Photo

கோடைக்காலம் என்பதால், தமிழகத்தில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோடைக்கால கடுமையான வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க செய்ய வேண்டியவை குறித்து விரிவாகப் பார்ப்போம்.

1.உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க, தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

2. அவசியமான பணிகளுக்கு வீட்டை விட்டு வெளியே செல்லும் போது குடிநீரை கையுடன் எடுத்து செல்ல வேண்டும்.

3. ஓ.ஆர்.எஸ்., எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் குடிக்க வேண்டும்.

4. இந்த பருவ காலத்தில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவை உண்ண வேண்டும்.

5. நல்ல காற்றோட்டம் உள்ள மற்றும் வெப்பம் தணிந்த இடங்களில் இருக்க வேண்டும்.

6. மெல்லிய, தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.

மின் விநியோகம்- தமிழக அரசுக்கு ஒன்றிய அரசு பாராட்டு

7. வெளியில் செல்லும் போது, காலணிகளை அணிவதுடன் குடையினையும் கொண்டு செல்ல வேண்டும்.

8. உடல் சோர்வாகவோ, மயக்கமாகவோ உணரும் பொழுது உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

9. வெயில் காலங்களில் வெறுங்காலுடன் வெளியே செல்ல வேண்டாம்.

10. சிறிய குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் மதிய வேளையில் (12 மணி முதல் 3 மணி வரை) வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

MUST READ