பச்சைத் துண்டு அணிந்துக் கொண்டு சட்டப்பேரவைக்கு வந்த தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், இன்று (பிப்.20) காலை 10.00 மணிக்கு 2024- 2025 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
“எங்கே போகிறது தமிழ்நாட்டின் பொருளாதாரம்?”- மருத்துவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!
அப்போது சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “பட்டதாரி இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்க 100 இளைஞர்களுக்கு தலா ரூபாய் 1 லட்சம் மானியம் வழங்க ரூபாய் 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். குறைந்த நீர் தேவையுடைய மாற்றுப் பயிர் ஒரு லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்ய ரூபாய் 12 கோடி மானியம் வழங்கப்படும்.
சர்க்கரை ஆலைகளின் செயல் திறனை அதிகரிக்க ரூபாய் 12.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 2024- 2025 ஆம் ஆண்டில் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த ரூபாய் 1,775 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். கரும்பு சாகுபடியை மேம்படுத்த ரூபாய் 20.43 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 2023- 2024 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்து கரும்பு வழங்கியவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
“வேளாண்மையை இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது முக்கியம்”- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேச்சு!
கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு டன் ஒன்றிற்கு ரூபாய் 215 சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூபாய் 250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம் 15,280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும்” என அறிவித்துள்ளார்.