spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமருத்துவத்தில் தமிழ்வழிக் கல்வி: மாணவர்களிடையே வரவேற்பு  – மா.சுப்பிரமணியன்

மருத்துவத்தில் தமிழ்வழிக் கல்வி: மாணவர்களிடையே வரவேற்பு  – மா.சுப்பிரமணியன்

-

- Advertisement -

தமிழகத்தில் மருத்துவ பாடத்திற்கான புத்தகங்களை தமிழ் மொழியில் மொழிபெயர்க்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது . இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளாா்.மருத்துவத்தில் தமிழ்வழிக் கல்வி: மாணவர்களிடையே வரவேற்பு  – மா.சுப்பிரமணியன்

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தின் புதிய அலுவலக கட்டிடத்தை தொடங்கி வைத்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் பிறகு செய்தியாளர்களை சந்திப்பில் பேசியதாவது, ”தமிழகத்தில் மருத்துவக் கல்வி தமிழ் வழியில் போதிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என மத்திய அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார் என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், மருத்துவ படிப்புக்கான புத்தகங்களை தமிழ் மொழியில் மொழிபெயர்க்கும் பணிகள் நடைபெற்று உள்ளது.  அதனை மருத்துவ மாணவர்கள் மகிழ்ச்சியோடு வரவேற்கிறார்கள் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

we-r-hiring

தமிழகத்தில் தென்காசி, மயிலாடுதுறை, பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட  6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் வேண்டுமென்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். மத்திய அமைச்சர் ஜே பி நட்டா அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளார் விரைவில் தமிழ்நாட்டிற்கு ஆறு புதிய கல்லூரிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் வந்தவுடன் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என தெரிவித்துள்ளாா்.

கூடுதல் நிதி ஒதுக்கீடு – தமிழ்நாடு சாலை மேம்பாட்டு துறை அறிவிப்பு

MUST READ