பூந்தமல்லி அருகே திருமழிசையில் உள்ள டாஸ்மாக் குடோனில் மதுபானம் ஏற்றிச்செல்லும் 60க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தம்.
டாஸ்மாக் நிறுவனம் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு கடந்த நான்கரை மாதங்களாக செலுத்த வேண்டிய சுமார் நாலே முக்கால் கோடி ரூபாய் பணம் செலுத்தாததால் ட்ரான்ஸ்போர்ட் நிர்வாகம் வாகனங்கள் இறக்கவில்லை. 300 மதுபான கடைகளுக்கு மதுபானம் விநியோகம் நிறுத்தம்.


திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை சிப்காட் பகுதியில் திருவள்ளூர் கிழக்கு காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட மொத்த டாஸ்மாக் கிடங்கு அமைந்துள்ளது. இந்த பகுதியில் இருந்து மதுபானங்கள் லாரிகள் மூலம் திருவள்ளூர் காஞ்சிபுரம் சென்னை மாவட்டத்தில் உள்ள 350-க்கும் மேற்பட்ட சில்லறை மதுபான விற்பனை அரசு மதுபான கடைகள் மற்றும் 120 நட்சத்திர ஹோட்டல்களில் இயங்கி வரும் மதுபான கூடங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் டாஸ்மார்க் நிர்வாகம் மதுபானங்கள் கொண்டு செல்லும் லாரி டிரான்ஸ்போர்ட் நிர்வாகத்திற்கு கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக போக்குவரத்து மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு சம்பளம் ரூபாய் நாலே முக்கால் கோடி ரூபாய் நிலுவையில் வைத்துள்ளதாகவும் அது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் இன்று வரை பேச்சுவார்த்தை நடத்தாமல் அலை கழிப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும் கடந்த இரண்டு வருடங்களுக்கு போடப்பட்ட ட்ரான்ஸ்போர்ட் ஒப்பந்தமானது முடிந்த நிலையில் ஒப்பந்தம் முடிந்தும் தாங்கள் வாகனங்களை இயக்கி வரும் நிலையில் மறு ஒப்பந்தம் போடுவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது எனவும் டென்டரை பாக்சில் போடுவதற்கு யாரையும் அனுமதிக்காததாலும் ஈ டெண்டர் முறையை அமல்படுத்த வலியுறுத்தியும் திருமழிசை அரசு மதுபானக் கிடங்கில் 60க்கும் மேற்பட்ட மதுபானங்கள் ஏற்றிச் செல்லும் லாரிகளை நிறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் திருவள்ளூர், சென்னை மற்றும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட அரசு மதுபான கடைகள் மற்றும் 120 நட்சத்திர ஹோட்டல்களுக்கு மதுபானங்கள் வினியோகமானது நிறுத்தப்பட்டுள்ளது சம்பவ இடத்தில் டாஸ்மார்க் நிறுவன அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இந்த போராட்டமானது நடைபெற்றது.
இந்நிலையில் போராட்டம் நடத்திய ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டனர். திருமழிசையில் டாஸ்மாக் மதுபானம் ஏற்றிச் செல்லும் லாரிகள் போராட்டம் வாபஸ் பெற்ற நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானம் விநியோகம் மீண்டும் தொடங்கப்பட்டது. 4 மாத வண்டிச்சத்தம் நிலுவைத் தொகை 4.75 கோடி தருவதாக டாஸ்மாக் ஒப்புக்கொண்டதால் ஊழியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.


