spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதென்காசியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்!

தென்காசியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்!

-

- Advertisement -

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தென்காசியில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

we-r-hiring

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. திமுக சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தென்காசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் மருத்துவர் ராணி ஸ்ரீ குமார் அவர்களை ஆதரித்து தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே கூடிய ஆயிரக்கணக்கான பொது மக்களிடம் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். கல்வி உரிமை – மொழி உரிமை – நிதி உரிமை என நம் உரிமைகளை பறித்து வரும் பாசிச பாஜக அரசு, கார்ப்பரேட்டுகளின் நண்பர்களாகவும் – சாமானியர்களின் எதிரியாகவும் திகழ்ந்து வருவதை எடுத்துக்கூறி உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்டோம்.

MUST READ