- Advertisement -
வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்க கடலில் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வந்தது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேலும் மேற்கு , வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஒடிசா கடற்கரையை விசாகப்பட்டினம் மற்றும் கோபால்பூர் இடையே கலிங்கப்பட்டினத்திற்கு அருகில் இன்று நள்ளிரவு கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.