Homeசெய்திகள்தமிழ்நாடுதிராவிட இயக்கம் கட்சியின் ஆட்சியல்ல, ஒரு கொள்கையின் ஆட்சி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திராவிட இயக்கம் கட்சியின் ஆட்சியல்ல, ஒரு கொள்கையின் ஆட்சி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

-

- Advertisement -

ஒன்றிய  பா.ஜ.க. அரசு கடந்த 2023-ஆம் ஆண்டு குலத்தொழிலை ஊக்குவிக்கும் வகையில் “விஸ்வகர்மா திட்டம்!” எனும் திட்டத்தை கொண்டுவந்தது. எந்த திட்டமாக இருந்தாலும் அது, சமூகநீதியை சமத்துவத்தை நிலைநாட்டுகின்ற நோக்கத்தோடு இருக்க வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளாா்.திராவிட இயக்கம் கட்சியின் ஆட்சியல்ல, ஒரு கொள்கையின் ஆட்சி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் குறு, சிறு , நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் கலைஞர் கைவினைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொங்கி வைத்தாா். அதன் பின் பேசிய அவர்,  ”ஒன்றிய அரசின் “விஸ்வகர்மா திட்டம்” சாதிய பாகுபாடுகளையும் குலத்தொழில் முறையையும் வெளிப்படையாவே ஊக்குவிக்கிறது. அதனால்தான், ஒன்றிய பாஜக அரசின் விஸ்வகர்மா திட்டத்தை கடுமையாக எதிர்க்கிறோம். விஸ்வகர்மா திட்டத்தில் குறைந்தபட்ச வயது 18 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதைக் கண்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். 18 வயது என்பது ஒரு மாணவர் உயர்கல்விக்காக கல்லூரிக்கு போகின்ற வயதா அல்லது குடும்பத்தொழிலையே செய் என தள்ளி விடுகின்ற வயதா?

படிப்பை விட்டு வெளியே போகின்ற  மாணவர்களையும் மீண்டும் கல்வி சாலைக்குள் அழைத்து வருவதுதான் ஒரு அரசின் கடமை ஆனால்,  மாணவர்களை படிப்பை விட்டு வெளியேற்றி, குடும்பத் தொழிலையே செய் என சொல்கிறது ஒன்றிய பாஜக அரசு.  திராவிட மாடல் ஆட்சியில்  புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் போன்ற திட்டங்கள் மூலமாக மாணவர்கள் உயர்கல்வி படிப்பதை உறுதி செய்ய  பாடுபடுறோம்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசு குலத் தொழிலை ஊக்குவிக்க பாடுபடுகிறது குடும்பத் தொழில் செய்ய பயிற்சி கொடுத்து, அவர்கள் வெளி உலகத்தையே பார்க்க கூடாது என நினைக்கிறது ஒன்றிய பாஜக அரசு. குலத்தொழிலை ஊக்குவிக்கும் ஒன்றிய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை மனசாட்சி உள்ள ஒருவர் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்? கைவினைக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும் சாதிய அடிப்படையில் பாகுபாடு காட்டாத வகையில் உருவானதுதான் கலைஞர் கைவினைத் திட்டம்.

கலைஞர் கைவினைத் திட்டதில் விரும்பிய  எந்த தொழிலையும்  யார் வேண்டுமானாலும் செய்யலாம்.  கலைஞர் கைவினைத் திட்டத்தில் விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 35-ஆக இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கலைஞர் கைவினைத் திட்டத்தில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை மானியத்துடன் கடன் வழங்கப்படுது. கலைஞர் கைவினைத் திட்டத்தில் இதுவரை  24,907 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. கலைஞர் கைவினைத் திட்டத்தில் வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு  8,951 பயனாளிகளுக்கு ரூ.170 கோடி கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கலைஞர் கைவினைத் திட்டமானது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை கைவினைக் கலைஞர்களுக்கும் அதிகாரம் அளிக்கும் வகையில உருவாக்கப்பட்டுள்ளது.

திராவிட மாடல் அரசு  சமூகநீதித் திட்டமாக. கலைஞர் கைவினைத்  திட்டத்தை  உருவாக்கி உள்ளது – இதுதான் காலத்தின் வெற்றி. திராவிட இயக்கத்தின் வெற்றி. இது ஒரு கட்சியின் ஆட்சியல்ல, ஒரு கொள்கையின் ஆட்சி – அந்த அடிப்படையில்தான் இதுபோன்ற திட்டங்களைத் தீட்டுகின்றோம். தமிழ்நாடு இன்றைக்கு மாபெரும் வளர்ச்சியை பெற்றிருப்பதற்கு பெரு நிறுவனங்கள் மட்டுமல்ல, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களாலும்தான் இந்த வளர்ச்சி சாத்தியமாகி இருக்கிறது என கூறியுள்ளாா்.

ரூ.34 கோடி மானியத்துடன் ரூ.170 கோடி கடன் ஒப்புதல் ஆணைகளை வழங்குகிறார் – முதலமைச்சர்

MUST READ