இந்திய-இலங்கை உடனான ஒப்பந்தத்தை விரைவில் மறு ஆய்வு செய்து கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிரந்தரமாக பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும். மீனவர்கள் கைது மற்றும் படகு பறிமுதலால் அவர்களின் வாழ்க்கை நிலை ஏற்றதாக மாறியுள்ளது. எனவே கச்சத்தீவை மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை விரைவில் மறு ஆய்வு செய்து கச்சத்தீவை மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடிதத்தில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளாா்.
அதிமுக பொதுச்செயலாளர் செங்கோட்டையன்: அட்ராசிட்டி கிளப்பும் ர.ர-க்கள்..!