கொடுத்த கடனை கேட்க சென்றவரை நாயை விட்டு கடிக்கவைத்த சம்பவம் நடந்திருப்பது நிதி நிறுவன ஊழியர்களிடத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.
கோவை வெள்ளலூர் பகுதி மகா கணபதி நகரை சேர்ந்தவர் மணிகண்டன். தனியார் நிறுவன ஊழியர். இவரின் மனைவி தர்ஷனா. 2020 ஆம் ஆண்டு மணிகண்டன் புதியதாக சுசுகி பிரஸோ கார் வாங்கியுள்ளார். அதற்கு முன்பணமாக 2 லட்சம் செலுத்தி உள்ளார். எஞ்சிய தொகைக்கு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கினார். அதற்கு மாதம் தோறும் 6000திற்கு மேல் தவணைத் தொகை செலுத்த வேண்டும். ஆனால் அந்த தவணைத் தொகையை மணிகண்டன் முறையாக செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. சில மாதங்களாகவே தவணைத் தொகையை செலுத்தாமல் இருந்ததாகவும் தெரிகிறது. நிதி நிறுவன ஊழியர்கள் தவணைத் தொகையை செலுத்தவில்லை என்றால் காரை பறிமுதல் செய்வோம் என்று கூறியுள்ளனர் . தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வரும் ஜெகதீஸ், சுரேஷ், கதிரவன் ஆகிய மூன்று பேரும் மணிகண்டன் வீட்டுக்கு சென்றனர். அப்போது மணிகண்டனும், அவரது மனைவியும் தங்களிடம் பணம் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
நிதி நிறுவன ஊழியர்கள் மூன்று பேரும் தங்களிடம் இருந்த சாவியை எடுத்து கொண்டு காரை எடுக்கச் சென்றனர். அப்போது மணிகண்டன் ஓடி சென்று காரை சாட் செய்து ஓட்டி சென்றார். நிதி நிறுவன ஊழியர்கள் காரை நிறுத்துங்கள் என்று பின்னால் ஓடி வந்தனர். அங்கு நின்று கொண்டிருந்த தர்ஷனா , நிறுவன உழியர்கள் ஜெகதீஸ்வரன் உள்ளிட்ட மூன்று பேரையும் பார்த்து அவர்களை விடாதே கடி கடி என்று நாயை ஏவிவிட்டதாக கூறப்படுகின்றது.
உடனே ஜெர்மன் ஷெப்பர்ட் அந்த நாய் வீட்டு வளாகத்தில் நின்றிருந்த ஜெகதீஸ் மேல் பாய்ந்து, அவரை 12 இடங்களில் கடித்துள்ளது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சை பின்னர் வீட்டுக்கு சென்று உள்ளார். இது குறித்து போத்தனூர் போலீஸ் சார்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். கொடுத்த கடனை கேட்க சென்றவரை நாயை விட்டு கடிக்கவைத்த சம்பவம் நடந்திருப்பது நிதி நிறுவன ஊழியர்களிடத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.
அழுத்தம் கொடுத்து அதற்கு இணங்குமளவிற்கு நான் பலவீனமாவன் அல்ல – விஜய்க்கு, திருமாவளவன் பதிலடி!