
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த நவம்பர் 17- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. கோயிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியின் மீது இன்று (நவ.26) மாலை 06.00 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது.

ரெட் கார்டு கொடுக்குறீங்களா….. நடிகை வனிதாவை தாக்கிய அந்த மர்ம நபர் யார்?
அதேபோல், பழனியில் உள்ள மலை மீதுள்ள தீபஸ்தம்பத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. மகா தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பரங்குன்றத்தில் மலை மேல் உள்ள உச்சி விநாயகர் கோயில் மேடையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
திரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி ஆகியோர் மீது வழக்கு தொடர்வேன்….. மன்சூர் அலிகானின் அதிரடி முடிவு!
சென்னை வடபழனி முருகன் கோயில் கோபுரத்தில் மகா அகல் விளக்கு ஏற்றப்பட்டது. புகழ்பெற்ற திருச்சி மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் கோயிலில் 5 அடி உயர செப்புக் கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.


