spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுடிஆர்பி தேர்வு ஊக்கத்தொகை இட ஒதுக்கீடு அடிப்படையில் வழங்கப்படும் - கோவி.செழியன்

டிஆர்பி தேர்வு ஊக்கத்தொகை இட ஒதுக்கீடு அடிப்படையில் வழங்கப்படும் – கோவி.செழியன்

-

- Advertisement -

டிஆர்பி தேர்வு ஊக்கத்தொகை இட ஒதுக்கீடு அடிப்படையில் வழங்கப்படும் - கோவி.செழியன்டிஆர்பி தேர்வின் அடிப்படையில் பொதுவாக வழங்கப்பட்டு வந்த முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டம் வரும் காலங்களில் இட ஒதுக்கீடு அடிப்படையில் வழங்கப்படுமென உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரி கல்வி இயக்கத்தில் முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் ஆணை வழங்குதல் மற்றும் பாரதி இளம் கவிஞர் விருதுகளை உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வழங்கினார்.

we-r-hiring

தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் கோவி.செழியன், ஒரு ஆண்டு காலம் நடத்தப்படாமல் இருந்த நிகழ்ச்சி தற்போது நடந்து வருகிறது. முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்குத்தொகை கல்வியை மேம்படுத்துவதற்கான அரிய திட்டம், மாணவ, செல்வங்கள் படிப்பதற்கு கல்வி பொருளாதாரம் தடையாக இருக்கக் கூடாது என்பது திராவிட மாடல் ஆட்சியின் கொள்கை, அனைவருக்கும் அனைத்தும் என்பதுதான் தமிழ்நாடு முதலமைச்சரின் நோக்கம்.

தொடர்ந்து சிறப்பான முறையில் தமிழ்நாடு முதல்வர் செயலாற்றி வருகிறார். மாணவ மாணவிகளுக்காக பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். புதிய திட்டங்களை கண்டுபிடிப்பதற்கு ஊக்குவிப்பதற்கு இந்த திட்டம் உதவும். 3 ஆண்டுகளுக்கு மாதம் 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளதாக கூறினார்.

ஆராய்ச்சி மாணவர்கள் பொதுவாக தேர்வு செய்யப்பட்டனர். இனி இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். ஆண்டுக்கு 120 பேருக்கு முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டத்தில் ஊக்கத்தொகை வழங்கப்பட்ட நிலையில் 180 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் TRB மூலம் தேர்வு நடத்தப்பட்டு ஆராய்ச்சி மாணவர்கள் பொதுவாக தேர்வு செய்யப்பட்டனர். இனி வரும் ஆண்டுகளில் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்களுக்கு ஊக்க தொகை வழங்கப்பட உள்ளதாக கூறினார்.

அப்படி என்னை அழைக்காதீர்கள்….. ரசிகர்களிடம் கோரிக்கை வைத்த நடிகர் அஜித்!

MUST READ