Homeசெய்திகள்தமிழ்நாடு"நடிகை திரிஷாவை மிகவும் மதிக்கிறேன்"- நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி!

“நடிகை திரிஷாவை மிகவும் மதிக்கிறேன்”- நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி!

-

 

திரிஷா குறித்த சர்ச்சை பேச்சு.....முன் ஜாமின் கோரி மனு அளித்துள்ள மன்சூர் அலிகான்!

நடிகை திரிஷாவை மிகவும் மதிக்கிறேன் என்று காவல்துறையினரின் விசாரணைக்கு ஆஜரான பின் நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

“விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது”- மியாட் மருத்துவமனை அறிக்கை!

நடிகை திரிஷா குறித்து அவதூறாகப் பேசிய புகாரில், சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல்துறையினர், இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுச் செய்துள்ளனர். இதையடுத்து, நடிகர் மன்சூர் அலிகான், மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜரானார்.

விசாரணைக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் மன்சூர் அலிகான், “நடிகை திரிஷாவை மிகவும் மதிக்கிறேன்; தனிப்பட்ட முறையில் நடிகை திரிஷாவை பற்றி பேசவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

குழந்தை வளர்ப்பு : பெற்றோர்களும், ஆசிரியர்களும் – என்.கே.மூர்த்தி..

அதேபோல், காவல்துறையினரின் விசாரணையில் நடிகர் மன்சூர் அலிகான் கூறியதாவது, “நான் ஜாலியாகப் பேசியதை திரிஷா தவறாகப் புரிந்துக் கொண்டார். வீடியோவில் பேசியது நான்தான்; எந்த உள்நோக்கத்துடனும் திரிஷா குறித்து நான் பேசவில்லை. என் பேச்சால் திரிஷா வருத்தமடைந்திருந்தால், அதற்காக நான் வருந்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

MUST READ